KAITHI 2: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக கடந்த 2019-ல் வெளியான திரைப்படம் ‘கைதி’. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படம்.

இந்தப் படத்திற்குப் பின்பே லோகேஷ் கனகராஜ் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் மாஸ்டர், கமல் நடிப்பில் விக்ரம் மீண்டும் விஜய்யை வைத்து லியோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார். தற்போது, நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், கைதி திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியது. கார்த்திக் மற்றும் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி.

இவர்களால்தான் ‘லோகேஷ் யுனிவர்ஸ்’ சாத்தியமானது. விரைவில் டில்லி திரும்ப வருவார்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம், ரஜினியை வைத்து இயக்கும் ‘கூலி’ திரைப்படத்துக்கு பிறகு கார்த்தியை வைத்து கைதி 2 இயக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார்.

நடிகர் கார்த்தி தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். அதனை முடித்துவிட்டு ‘கைதி 2’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.