“உண்மையாகவே நான் பிச்சை எடுத்தேன” – நடிகர் கவின் உருக்கம்

0
65

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் நெல்சன் திலிப்குமார். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளவில் 600 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு பிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார். நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார்.

இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளடி பெக்கர்’ . இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் கடந்த அக்.7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த டீசரைப் பார்த்த ரசிகர்கள் கவினின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கவின் நேர்காணல் கொடுத்துள்ளார்.

அதில், “இந்த படத்தின் ஷுட்டிங் போவதற்கு முன்னதாக எனக்கு இந்த கெட்டப் சரியாக செட் ஆகுமா? என சந்தேகம் ஏற்பட்டது. மக்களும் உண்மையாகவே பிச்சைக்காரர்களுக்கு காசு போடுகிறார்களா? என்கிற சந்தேகம் எனக்கு வந்தது.

அதனால் கெட் அப் போட்டுக்கொண்டு தெருவில் நடந்தேன். ஒரு அம்மாவிடம் சென்று சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு காசு இருந்தா கொடுங்கனு கேட்டேன். அந்த அம்மா எனக்கு இருபது ரூபாய் கொடுத்தார். அதற்கு பின் எனக்கு நம்பிக்கை வந்து, சரி ஷூட் போகலாம் என முடிவு செய்தேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here